ஆஸ்துமா
நம் நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் பலர் அவஸ்தைப்படும் வியாதிகளில் ஒன்று 'ஆஸ்துமா'.
ஏன் ஏற்படுகிறது
நம் உடலிலுள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது சிறுநீரகங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சிறுநீரகங்களின் வடிகட்டும் பகுதியில் உப்பு படிவங்கள் படிவது அல்லது கழிவு பொருட்களால் அடைப்பு ஏற்படுவது அல்லது சீதோஷண நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் குளிர்ச்சியால் சிறுநீரகங்களில் சுருக்கம் ஏற்படுவது ஆகிய காரணங்களால் கழிவுநீர் முழுவதும் பிரிக்கப்பட முடியாமல் இரத்தத்திலேயே கலந்துவிடுகிறது. இந்த கெட்டுப் போன இரத்தம் நுரையீரலை அடையும்போது, அங்கு சுரக்கும் நீருடன் கலந்து சுத்தம் செய்யப்படுகிறது.
அப்படி சுத்தப்படுத்த பெறும்போது பிரிக்கப்படும் கழிவுநீர், தும்மல் மூலம் மூக்கில் நீராக வெளியேறுகிறது. பிறகு இந்த நீர் இறுகி மூக்கடைப்பு ஏற்படுகிறது. மூக்கு சிந்தும்போது சளியாக வெளியேறுகிறது. இறுகிய இந்த கழிவே இருமலின் போது கோழையாக வெளியாகிறது.
ஆக, நம் இரத்தத்தில் அசுத்தம் ஏற்பட்டால், அது எந்த காரணத்தினால் ஏற்பட்டாலும், நம் உடல் தானாகவே அதை வெளியேற்றும் வேலையை செய்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட்டால் பிரச்சனை இத்தோடு முடிந்துவிடும்.
சரி.. எப்படி செயல்படுவது?
மூக்கில் நீர் அல்லது சளி வரும்போதே அதை சிந்த வேண்டும். அப்படி வெளியே வரும் சளியை சிந்தாமல் நம்மில் பலர் விழுங்கிவிடுவர். அப்படி செய்வதால், உடல் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, இருமலின் வாயிலாக இன்னும் கொஞ்சம் பலமாக வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் நாம் என்ன செய்வோம்? முதலில் மூக்கில் நீராக வந்தது, பிறகு சளியாகி இப்போது இருமல் வரை வந்துவிட்டதே என பயந்து மருத்துவரிடமோ அல்லது மருந்து கடைக்கோ சென்று சளிக்கான மாத்திரை அல்லது மருந்தை வாங்கி சாப்பிடுவோம். அது சளியை நிறுத்தும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு. ஏனென்றால் சளி என்பதும் ஒரு கழிவு. அதை உடலே வெளியேத் தள்ளும்போது அது உருவாக காரணமாய் இருந்த அந்த அடிப்படை பிரச்சனை (சிறுநீரகம்) என்னவென்று தெரிந்துகொள்ளாமல், நாம் அதை நிறுத்துவதற்கான எதிர்வினையை செய்கிறோம். விளைவு மூக்கில் வடியும் சளியை நாம் நிறுத்திவிடுவதால், அது நுரையீரலில் சேர்ந்து விடுகிறது இப்படி நுரையீரலில் படிந்த கழிவு நீரையே 'கபம்' என சொல்லுவர். இதன் காரணமாக இருமல், மூச்சு திணறல், மூச்சு வாங்குதல், பீனிசம் (Sinus) போன்றவை ஏற்படுகின்றன. நாளடைவில் இதுவே ஆஸ்துமாவாக உருமாறுகிறது.
எப்படி குணப்படுத்துவது?
சிறுநீரகங்கள் சீராக செயல்பட பின் விளைவு ஏற்படுத்தாத தக்க மூலிகை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டும் நுண்வலை நரம்புகளை சரி செய்ய விசேஷ அனல் சிகிச்சை (Sauna Bath) முறையை கையாள வேண்டும்.
தேவையான பொருட்கள்:
● சீரகம் - 15 கிராம்
● தனியா - 15 கிராம்
● பச்சை வேப்பிலை (முற்றியது) - 15 கிராம்
● வில்வ இலை - 25 கிராம்
● அத்தி இலை - 25 கிராம்
● ஆடாதோடை இலை - 25 கிராம்
● தண்ணீர் - 1½ லிட்டர் -
இவை அனைத்தையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக சுண்டியதும் இறக்கி ஆற வைத்து வடிகட்டி, ஒரு பாட்டிலில் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு முறை தயாரித்த கஷாயத்தை, லேசாக சூடேற்றி தினமும் சாப்பாட்டிற்கு முன் 100 மில்லி அளவு நாவினால் ருசித்து எச்சிலில் ஊற வைத்தவாறு மெதுவாக குடிக்க வேண்டும்.
நீண்ட கால நோயாளிகள் 3 மாதம் இதை தொடர்ந்து குடித்துவர பூரண குணம் நிச்சயமாகும்.