செவ்வாய், 30 மார்ச், 2021

Asthuma - ஆஸ்துமா

ஆஸ்துமா

நம் நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் பலர் அவஸ்தைப்படும் வியாதிகளில் ஒன்று 'ஆஸ்துமா'.

ஏன் ஏற்படுகிறது

நம் உடலிலுள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது சிறுநீரகங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சிறுநீரகங்களின் வடிகட்டும் பகுதியில் உப்பு படிவங்கள் படிவது அல்லது கழிவு பொருட்களால் அடைப்பு ஏற்படுவது அல்லது சீதோஷண நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் குளிர்ச்சியால் சிறுநீரகங்களில் சுருக்கம் ஏற்படுவது ஆகிய காரணங்களால் கழிவுநீர் முழுவதும் பிரிக்கப்பட முடியாமல் இரத்தத்திலேயே கலந்துவிடுகிறது. இந்த கெட்டுப் போன இரத்தம் நுரையீரலை அடையும்போது, அங்கு சுரக்கும் நீருடன் கலந்து சுத்தம் செய்யப்படுகிறது.

அப்படி சுத்தப்படுத்த பெறும்போது பிரிக்கப்படும் கழிவுநீர், தும்மல் மூலம் மூக்கில் நீராக வெளியேறுகிறது. பிறகு இந்த நீர் இறுகி மூக்கடைப்பு ஏற்படுகிறது. மூக்கு சிந்தும்போது சளியாக வெளியேறுகிறது. இறுகிய இந்த கழிவே இருமலின் போது கோழையாக வெளியாகிறது.

ஆக, நம் இரத்தத்தில் அசுத்தம் ஏற்பட்டால், அது எந்த காரணத்தினால் ஏற்பட்டாலும், நம் உடல் தானாகவே அதை வெளியேற்றும் வேலையை செய்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட்டால் பிரச்சனை இத்தோடு முடிந்துவிடும். 

சரி.. எப்படி செயல்படுவது?

மூக்கில் நீர் அல்லது சளி வரும்போதே அதை சிந்த வேண்டும். அப்படி வெளியே வரும் சளியை சிந்தாமல் நம்மில் பலர் விழுங்கிவிடுவர். அப்படி செய்வதால், உடல் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, இருமலின் வாயிலாக இன்னும் கொஞ்சம் பலமாக வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் நாம் என்ன செய்வோம்? முதலில் மூக்கில் நீராக வந்தது, பிறகு சளியாகி இப்போது இருமல் வரை வந்துவிட்டதே என பயந்து மருத்துவரிடமோ அல்லது மருந்து கடைக்கோ சென்று சளிக்கான மாத்திரை அல்லது மருந்தை வாங்கி சாப்பிடுவோம். அது சளியை நிறுத்தும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு. ஏனென்றால் சளி என்பதும் ஒரு கழிவு. அதை உடலே வெளியேத் தள்ளும்போது அது உருவாக காரணமாய் இருந்த அந்த அடிப்படை பிரச்சனை (சிறுநீரகம்) என்னவென்று தெரிந்துகொள்ளாமல், நாம் அதை நிறுத்துவதற்கான எதிர்வினையை செய்கிறோம். விளைவு மூக்கில் வடியும் சளியை நாம் நிறுத்திவிடுவதால், அது நுரையீரலில் சேர்ந்து விடுகிறது இப்படி நுரையீரலில் படிந்த கழிவு நீரையே 'கபம்' என சொல்லுவர். இதன் காரணமாக இருமல், மூச்சு திணறல், மூச்சு வாங்குதல், பீனிசம் (Sinus) போன்றவை ஏற்படுகின்றன. நாளடைவில் இதுவே ஆஸ்துமாவாக உருமாறுகிறது.

எப்படி குணப்படுத்துவது?

சிறுநீரகங்கள் சீராக செயல்பட பின் விளைவு ஏற்படுத்தாத தக்க மூலிகை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டும் நுண்வலை நரம்புகளை சரி செய்ய விசேஷ அனல் சிகிச்சை (Sauna Bath) முறையை கையாள வேண்டும்.  

தேவையான பொருட்கள்:

● சீரகம்   - 15 கிராம்

● தனியா  - 15 கிராம்

● பச்சை வேப்பிலை (முற்றியது) - 15 கிராம்

● வில்வ இலை   - 25 கிராம்

● அத்தி இலை   - 25 கிராம்

● ஆடாதோடை இலை  - 25 கிராம்

● தண்ணீர்  - 1½ லிட்டர் -

இவை அனைத்தையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக சுண்டியதும் இறக்கி ஆற வைத்து வடிகட்டி, ஒரு பாட்டிலில் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு முறை தயாரித்த கஷாயத்தை, லேசாக சூடேற்றி தினமும் சாப்பாட்டிற்கு முன் 100 மில்லி அளவு நாவினால் ருசித்து எச்சிலில் ஊற வைத்தவாறு மெதுவாக குடிக்க வேண்டும். 

நீண்ட கால நோயாளிகள் 3 மாதம் இதை தொடர்ந்து குடித்துவர பூரண குணம் நிச்சயமாகும்.

புதன், 10 மார்ச், 2021

மூல நோய் கசாயம்

வலியோடு இருக்கும் செரிமானம் இன்மை, சீரணம் இன்மை,

நாக்கில் சுவை இன்மை, குடல் புழுக்கள், குடல்  பூச்சிகள்,

மூலம் சம்பந்தப் பட்ட மூலத்தில் ஏற்படும்  உதிரப்போக்கு வலி,

ஆசனவாய் அரிப்பு சம்பந்தப் பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்

தீர்வாக அமைகிறது இந்த  மருந்து.

சுண்டைக்காய் வற்றல் ................ இரண்டு கிராம்

மிளகு ................ இரண்டு கிராம்

சீரகம் ................ இரண்டு கிராம்

வெந்தயம் ................ இரண்டு கிராம்

கறிவேப்பிலை ................ இரண்டு கிராம்

ஆகிய ஐந்து   பொருட்களையும்

நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து நன்கு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாக வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒவ்வொரு முறையும் புதிதாக கசாயம் போட்டு குடித்து வர வேண்டும்.

கம கம என்று  வாசனையுடன் கூடிய கசாயம் இது

குறிப்பு

அனைத்துப் பொருட்களையும் சம அளவு சேர்த்து அரைத்து தூளாக்கி சூரணமாக எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு முதல் வாய் சோறு நெய்யில் பிசைந்து கொடுக்கலாம்

  • கர்ப்பிணிப் பெண்களும் இந்த மருந்தை பயமின்றி பயன்படுத்தலாம்
  • இதை ஒரு பருப்புப் பொடி போல பயன்படுத்தலாம்
  • அல்லது ஒரு துவையல் போல அரைத்தும் பயன்படுத்தலாம்
  • வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் நல்ல மருந்து இது
  • மூல நோயைக் கரைக்கக் கூடிய மூல நோயின் தொந்தரவை மாற்றக் கூடிய எளிய மருந்து இது
  • ஆசன வாய் அரிப்பு முள் குத்துவது போன்ற எரிச்சலும் வலியும் வேதனையும் நீக்கக் கூடிய மருந்து இது

மூன்று வகை மூல நோய்களையும் நீக்கிக் கொள்ள உதவும் நல்ல மருந்து இது

முதல் வகை மூல நோய்

உள் மூலம்

மலம் கழிக்கும்போது கடுமையான வலி வேதனை இரத்தப் போக்கு ஏற்படும் உள்ளே இருக்கக் கூடிய மூலத்தில் இருந்து கடுமையான வலியும் அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்

மலசிக்கல் அதிகமாக இருக்கும்

வெளிப்புறமாக பார்க்கும்போது எந்த வித பாதிப்பும் தெரியாது

இரண்டாம் வகை மூல நோய்

வெளி மூலம்

மலம் கழிக்கும்போது மட்டும் ஒரு தசைப்பகுதி வெளியில் வந்து இருப்பதை உணர முடியும்

மலம் கழித்த பின் ஆசனவாயை சுத்தம் செய்யும்போது தசை வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையை உணர முடியும்

அரைமணி நேரத்தில் தானாகவே உள்ளே போய் விடும்

ஆசன வாய் முழுவதும் வலி வேதனை எரிச்சல் கடுமையான குத்தல் வலிகளும் இருக்கும்

மூன்றாம் வகை மூல நோய்

உள்ளே வளர்ந்திருக்கக் கூடிய தசைப்பகுதி முழுவதும் வெளியே பிதுங்கி தொங்கிக்கொண்டு இருக்கும்

எவ்வளவு முயற்சி செய்தாலும் உள்ளே போகாது

இந்த மூன்று வகை மூல நோய்களையும் நீக்கிக்கொள்ள உதவும் அற்புதமான மருந்து இது

மூல நோய் வராமல் தடுக்க மூல நோயை அறுவை சிகிச்சை இன்றி குணப் படுத்திக் கொள்ள மூல நோய் மீண்டும் ஏற்படாமல் காக்கக் கூடிய ஆசன வாய் தசைப் பகுதிகள் மலப் பை பகுதி தசைப்பகுதிகளும் இரத்தக் குழாய்களும் பலப் பட உதவும் மருந்து இது

  • சுவை இன்மை ருசி இன்மை பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது இது
  • உணவு சாப்பிடுவதில் விருப்பத்தை ஏற்படுத்தி உடலுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
  • குடல் புழுக்கள் முழுமையாக வெளியேற காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்

இதை ஒரு மருந்தாக அல்ல உணவாக சாப்பிட்டு நலமுடன் வாழ முடியும்

முருங்கை vs கொரோனா

எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

  • முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
  • வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.
  • இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.
  • முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.