வியாழன், 25 பிப்ரவரி, 2021

மலச்சிக்கல் - Constipation

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்…

இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கியமான சிக்கல்கள் இரண்டு. ஒன்று மனச்சிக்கல். மற்றொருன்று மலச்சிக்கல். மனச்சிக்கலை தீர்க்கதான் படாதபாடு படணும். ஆனால், மலச்சிக்கலை எளிய வைத்திய முறையை கொண்டு எளிதில் தீர்க்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.  சில நேரங்களில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும்.

கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும் போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். 

இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். 

வாழ்க்கை முறை மாற்றங்கள் 

*  போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். தினமும் குறைந்தது 2.5 – 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

*  வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல். இது உடலில் உள் சூட்டை தணிக்கும். மேலும் கண் பார்வை தெளிவாகும். மூலாதார சூட்டையும் தணிக்கும்.

*  தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.  

*  தினமும் பச்சை காய்கறிகள், பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

*  இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி, புட்டு, இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும். இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம். 

*  காலை உணவைத் தவிர்க்காமல் நேரத்துக்கு சாப்பிடுவதுடன், சரிவிகித உணவு உட் கொள்ளவும். 

*  வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இண்டியன் டாய் லெட்டை பயன்படுத்தவும்.

*  தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும்.

*  மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் அடக்காமல் கழிவறை சென்று விடவும்.

*  மன அழுத்தம் தவிர்க்கவும்.

மலச்சிக்கல் நீக்கும் உணவுகள் 

*  காபி, தேநீர், குளிர்பானங்களை கூடுமானவரை தவிர்த்து விடவும். 

*  இளநீர், பழச்சாறு அருந்தவும். 

*  இரவில் இரண்டு பழங்கள் சாப்பிடுவது மிக நல்லது. வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சீஸனல் பழங்களும் உண்ணலாம். 

*  நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானியங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். 

*  வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, புடலங்காய், அவரைக்காய், முட்டைகோஸ், பாகற்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், 

*  கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், பேரீட்சை, அத்திப்பழம் போன்ற பழங்கள், மிளகு, ஓமம், கொத்தமல்லித்தழை… 

இவையெல்லாம் நார்ச்சத்து நிறைந்தவை. உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்ல தீர்வு தரும்.

சனி, 13 பிப்ரவரி, 2021

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு 

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு குழந்தையின்மை  பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள். 

  • பூண்டு
  • மாதுளம் பழம்.
  • செவ்வாழைப்பழம்
  • பசலைக் கீரை
  • மிளகு
  • தக்காளி
  • தர்பூசணி
  • ஆப்பிள்
  • முந்திரி
  • வால்நட் பருப்பு
  • பாதாம் பருப்பு
  • பூசணிக்காய் விதைகள்
  • நிலக்கடலை
  • சிவப்பரிசி
  • நாட்டுக்கோழி இறைச்சி

இன்று முதல் இவற்றை கடைபிடித்தால் போதும்: 

மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம்.

மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.

பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.

குழந்தை பெற நினைப்பவர்கள் சிகரெட், மது பழக்கமிருந்தால் உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் இந்த பழக்கங்கள் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.

உடலை ஆரோக்கியமாக, வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வது அவசியம். 

ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.

தண்ணீர் குடிக்கும் போது செய்யும் தவறு

தண்ணீர் குடிக்கும் போது நாம் செய்யும் இந்த சிறிய தவறுதான் “ஹெர்னியா” ஏற்படுகிறது..! எப்படி தப்பிப்பது!!

ஹெர்னியா ஏற்படும்

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்

இரைப்பை குடல் பாதை பாதிப்பு

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும்.

இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

சிறுநீரக பாதிப்பு

தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

ஆர்த்ரிடிஸ்

சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

நரம்புகள் டென்சன் ஆகும்

பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

சில குறிப்புகள்

உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.

அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.

வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும் , இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம் …

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

உணவு உண்ணும் நேரங்கள் - Food Timings

ஐந்து வேளை உணவு ஆரோக்கியம்..! எதை, எப்போது சாப்பிடுவது?

காலையில சாப்பிட எங்கே நேரம் இருக்கு’’, "மதியம் கொஞ்சம்தான் சாப்பிட்டேன்’’, "நைட் லேட்டா சாப்பிட்டுப் பழகிடுச்சு’’ போன்ற வசனங்களை ஒரு நாளில் ஒரு தடவையாவது கேட்டிருப்போம்; நாமே கூட சொல்லியிருப்போம். நம் உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்க உதவுவது உணவு. அதிலும், சரியான நேரத்துக்குச் சரியான உணவு உண்பதே உடலுக்கு நன்மை தரும். 

உணவைச் சாப்பிடாமல் தவிர்ப்பது எந்த அளவுக்கு உடல் நலத்தைப் பாதிக்குமோ, அதே அளவுக்கு நேரம் தாழ்த்தி உண்ணும் உணவும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும். எந்த உணவை, எந்த நேரத்தில், எப்போது சாப்பிடவேண்டும்... பார்க்கலாமா? 

`மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்பதை சிறுவயதிலிருந்து கேட்டிருக்கிறோம். ஆனால், `ஒரு நாளைக்கு ஐந்து வேளையாக உணவைப் பிரித்துச் சாப்பிடுவதே சிறந்தது’ என்கிறார்கள் உணவியலாளர்கள். 

காலை உணவு:

காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9:45-க்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், காலை உணவானது முதல் நாள் இரவு முழுக்க வயிற்றை வெறும் வயிற்றில் வைத்திருந்து, நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் சாப்பிடுவது. இதுதான் ஒரு நாளைத் தொடங்குவதற்கான புத்துணர்ச்சியை நம் உடலுக்குத் தருகிறது. மூளை முதல் ரத்தம் வரை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு வழிவகுக்கிறது. 

`இட்லி - சாம்பார் சிறந்த காலை உணவு’ என யுனெஸ்கோ சான்றளித்திருக்கிறது. அதேபோல், பழைய சோற்றை காலை உணவாகச் சாப்பிடலாம். இது, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க உதவும். தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும். தோசை - சட்டினி - சாம்பார், பூரி - உருளைக்கிழங்கு குருமா, பொங்கல், சப்பாத்தி - சப்ஜி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, புட்டு - கொண்டைக் கடலை, சத்துமாவுக் கஞ்சி மற்றும் பழங்கள் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை. 

மிட் மார்னிங்:

காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணிக்குள் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகப் பருகலாம். 

மதிய உணவு: 

மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், மதிய உணவுதான் ஒரு நாளில் நாம் சாப்பிடும் அதிக அளவு உணவு. உடல் தொடர்ந்து இயங்கத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது. 

மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது நல்லது. நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை இது கொடுக்கும். மதிய உணவாக வெரைட்டி ரைஸ் எனப்படும் புளியோதரை, தக்காளி சாதம், லெமன் சாதம்... எதுவாக இருந்தாலும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. 

அனைத்து வகை கீரைகளையும், பருப்புகளையும், பயறுகளையும், காய்கறிகளையும் மதிய உணவாகச் சாப்பிடலாம்.

கைக்குத்தல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாம். பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரியாணி, மீன், இறைச்சி போன்ற உணவு வகைகளுக்கு மதிய நேரமே சிறந்தது. அப்போதுதான் அவை செரிமானமாவதற்கான நேரம் உடலுக்குத் தாராளமாகக் கிடைக்கும்.

மதிய உணவாக எதைச் சாப்பிட்டாலும் இறுதியில் ரசத்தை உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசம், செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தைப்போலவே சூப்பும் மதியம் சாப்பிடச் சிறந்தது.

மாலை ஸ்நாக்ஸ்:

மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இரவு உணவு:

இரவு உணவை மாலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம். 

இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா, கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும்.

கஃபைன் உள்ள பானங்கள், கார்பனேட்டட் டிரிங்க்ஸ், அசைவ உணவுகள், கீரை, மசாலா அதிகம் நிறைந்த துரித உணவுகள், மைதா பொருள்கள், நொறுக்குத்தீனி, அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. 

சாப்பிட்டவுடன் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை!

பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரம் வந்துவிட்டது என்பதற்காக வலுக்கட்டாயமாக எதையும் சாப்பிடக் கூடாது. உணவை நொறுங்கக் கடித்து, மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவும் சாப்பிட்டு முடித்து அரை மணி நேரத்துக்குப் பின்னரும் தண்ணீர் குடிக்கலாம். சாப்பிடும்போது குடிக்கக் கூடாது. 

* புகைப்பிடிக்கக் கூடாது. இது செரிமானத் தன்மையைக் குறைத்து, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். 

* பழச்சாற்றை குடிக்கக் கூடாது. இது செரிமானத்துக்கு உதவும் டைஜெஸ்டிவ் ஜூஸை (Digestive juices) உருவாகவிடாமல் தடுக்கும். செரிமானக் கோளாறை உண்டாக்கும்.

* உணவு சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. செரிமானத்துக்குத் தேவையான நேரத்தை தூங்குவது குறைத்துவிடும். இது, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

* உடற்பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தால் வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுவலி ஏற்படும் வாய்ப்பு உண்டு.

* சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. இது கை கால்களில் சீரற்ற ரத்த ஓட்டத்தை உண்டாக்கும். செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளில் இடையூறை உண்டாக்கும். 

* டீ, காபி குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ஆக்ஸலேட் மற்றும் ஃபைலேட் உடலில் இரும்புச்சத்தை உறியும் செயலை (Iron absorption) சரியாக நடக்கவிடாமல் தடுக்கும்.