குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு குழந்தையின்மை பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்.
- பூண்டு
- மாதுளம் பழம்.
- செவ்வாழைப்பழம்
- பசலைக் கீரை
- மிளகு
- தக்காளி
- தர்பூசணி
- ஆப்பிள்
- முந்திரி
- வால்நட் பருப்பு
- பாதாம் பருப்பு
- பூசணிக்காய் விதைகள்
- நிலக்கடலை
- சிவப்பரிசி
- நாட்டுக்கோழி இறைச்சி
இன்று முதல் இவற்றை கடைபிடித்தால் போதும்:
மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம்.
மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.
பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.
குழந்தை பெற நினைப்பவர்கள் சிகரெட், மது பழக்கமிருந்தால் உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் இந்த பழக்கங்கள் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.
உடலை ஆரோக்கியமாக, வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வது அவசியம்.
ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக