கறிவேப்பிலை
இலையின் மருத்துவ மகத்துவம் :
சத்துகள் : வைட்டமின்
ஏ, வைட்டமின்
பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி,
கால்சியம் மற்றும் இரும்புச்சத்து .
பொதுவாக
உணவில் நறுமணத்திற்காகவும்,
சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்.
கொழுப்புக்கள்
கரையும்:
காலையில்
வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான உடல் அமைப்பை பெறலாம்.
இரத்த
சோகை:
இரத்த
சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை
உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து,
இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை
நோய் :
சர்க்கரை
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பரம்பரையாக வரும் சர்க்கரை நோயாளிகள் தினமும்
காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக
இருக்கும்.
இதய
நோய்:
கறிவேப்பிலை
உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
செரிமானம்
:
அதிகாலையில்
வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
முடி
வளர்ச்சி :
கறிவேப்பிலையை
தினமும் சிறிது உட்கொண்டு வந்தால்,
முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளித் தொல்லை:
ஒரு
டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி
வெளியேறிவிடும்.
கல்லீரல்
பாதிப்பு:
நீங்கும்
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால்,
கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.
மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு,
சீராக செயல்படவும் தூண்டும்.
அதிக குடியினால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல பலன் அடையலாம்.
மன
சிதைவு
ஒரு
பிடி கறிவேப்பிலை சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் மன அழுத்தத்தால் ஏற்பட்ட
பிதற்றல் குணமாகும்.
மனித
உடலின் நண்பன் கறிவேப்பிலை தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக