செவ்வாய், 29 டிசம்பர், 2015

Cinnamon Health Benefits - இலவங்க மரப்பட்டையின் மருத்துவ பயன்கள்

ஆரோக்கியம் கொழிக்கும் இலவங்க மரப்பட்டை

உணவில் வாசனைக்காக சேர்க்கக்கூடிய பொருட்களில் பட்டை என நாம் அழைக்கும் இலவங்கப்பட்டையும் ஒன்று, 
இதன் தாயகம் இலங்கை.  இது உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருள் ஆகும். இதற்கு மனதைக் கவரும் மணமும், யாவரும் விரும்பும் லேசான இனிப்புச் சுவையும் உண்டு. இதனை லேசாக ஒடித்தாலே மூக்கைத் துளைக்கும் மணத்தை அறிய முடியும்.

பிரியாணி, குருமா போன்ற உணவு வகைகளில் உபயோகிக்கும் இந்த மரப்பட்டையை  சின்னமான் (Cinnamon) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பல பகுதிகளில் விளைகிறது. 
இலவங்கப்பட்டையில் நார்ச்சத்தும் மெக்னீசியம், இரும்பு, மற்றும் கால்சியம் சத்தும் காணப்படுகிறது. நாம் நேரடியாக உண்ணும் பொழுது அதிசயிக்கத்தக்க ஆரோக்கியத்தை தருகிறது.   
இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது இதனை ஒரு அதிசய மூலிகை என்று ஒத்துக்கொள்ள வேண்டும். 

தேனுடன் இலவங்கப் பட்டை கலந்து உண்டால் பல நோய்கள் குணமாகும். இந்தக் கலவை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. தேனில்  இயற்கையாக இனிப்பு சத்து உள்ளதால் சரியான அளவில் எடுத்துக் கொண்டால், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு கெடுதல் செய்யாது. (நீரிழிவு உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் உட்கொள்வது உத்தமம்).  


இலவங்கப்பட்டைப் பொடி
தேன் 



வீட்டில்  தேன் ஒரு பாட்டில் மற்றும் இலவங்கப் பட்டையை நன்றாக பொடி செய்து எப்பொழுதும் வைத்துக் கொள்ளவும். இனி இவை இரண்டும் நம் உடலுக்கு செய்யும் அற்புதங்களை பார்க்கலாம்.

நினைவாற்றல் பெருகும்

மூளையின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தரக்கூடிய நல்ல மருந்து, நரம்பு பதற்றம் மற்றும் நினைவாற்றலை பெருக்க  உதவுகிறது.

முகப் பொலிவடைய

முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால், மூன்று மேசைக் கரண்டி தேனுடன் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்து, இரவு படுக்கும் முன் இந்தப் பேஸ்ட்டை பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளின் மேல் பூசி. காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும், தினசரி செய்து வர முகப் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவடையும்.


சொறி, படை மற்றும் வீக்கத்திற்கும் பூசலாம்.

உடலில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறுவதை நிறுத்த இலவங்கப் பட்டை பொடியை காயத்தின் மீது போட்டால் இரத்தம் நிற்கும், தொடர்ந்து பொடியை காயத்தின் மேல் போட்டு வந்தால் காயம் விரைவில் தழும்பு இல்லாமல் ஆறும்.

முடி உதிர்வதை தவிர்க்கக் கூடியது

தலைக்கு தேய்க்கும் எண்ணையை காய்ச்சும் போது சிறிது இலவங்கப்பட்டையை சேர்த்து காய்ச்சினால் முடி உதிர்வது நிற்கும்.

வாய் மணக்க  

வாய் துர்நாற்றம் என்பது வயிற்றில் புண்கள் இருந்தால் ஏற்படக்கூடிய வியாதி. அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

தினமும் காலையில் தேனையும் இலவங்கப் பொடியையும் மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.

காது கேளாதவர்களுக்கு நற்செய்தி

தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் கலந்து காலை மற்றும் இரவு வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர இடையில் ஏற்பட்ட காது கேளாமை நீங்கும்.


மூட்டு வலிக்கு சிறந்த மருந்து 


மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி இலவங்கப் பொடியை கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும். காலை எழுந்தவுடன் இருக்கக்கூடிய மூட்டுவலி மற்றும் மூட்டு இறுக்கத்தை போக்கி மூட்டுக்களை எளிதாக இயங்கச் செய்கிறது. எவ்வளவு கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்.

மூட்டு வலி தவிர தசைவலி மற்றும் இறுக்கம் ஆகியவற்றை போக்க வல்லது.

எலும்புகளின் இணைப்பு திசுக்களை வலுவடைய செய்து இணைப்புகளில் ஏற்படும் வலியை போக்குகிறது .

சிறுநீர் கோளாறு தீர 


சிறுநீர் கோளாறுகளுக்கு இலவங்கப் பட்டை ஒரு சிறந்த மருந்து, இலவங்கப்பட்டை பொடியை தினசரி சிறிது அளவு உட்கொள்ளும் பொழுது சிறுநீரகங்கள் சீராக இயங்குகின்றன. சிறுநீர் பிரிவது இயல்பாக நடைபெறுகிறது.

வெது வெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடி, 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வர, 
சிறுநீரகப் பாதை மற்றும் சிறுநீர் குழாய்களில் உள்ள தொற்றுக் கிருமிகளை அழித்து விடும். 

கொழுப்பை உடலிலிருந்து அகற்ற

கெட்ட கொழுப்புகளை குறைக்கும்

கெட்ட கொழுப்புகளை குறைப்பதில், இலவங்கப் பட்டைப் பொடி சிறந்ததாகும், இப்பொடியை 1 தேக்கரண்டி உட்கொண்ட 2 மணி நேரத்திற்குள் சுமார் 20% கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றது. இதனை டீ-யுடன் சேர்த்து அருந்தும் போது 100% பயனளிக்கின்றது.

உடல் எடை குறைய

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 2 மேசைக் கரண்டி தேனும் 3 மேசைக் கரண்டி இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை மற்றும் இரவு இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் இருக்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட


எளிதில் ஜீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல்,
வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய், வயிற்றில் அல்சர்  போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் மசாலாவோடு இலவங்கப் பட்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்று நோயிலிருந்து நம்மை காக்கும். 

அசைவ உணவுகள் சமைக்கும் போது இலவங்கப் பட்டையை சேர்ப்பது வாசனைக்காக மட்டுமல்ல அந்த உணவில் உள்ள கொழுப்புச்சத்து உடலில் சேராமல் தடுக்கவும் எளிதில் ஜீரணமாகவும் தான் சேர்கிறார்கள். மேலும் 
2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி இலவங்கப் பொடி கலந்து உண்டு வர 
சாப்பிட்டவுடன் தோன்றும் நெஞ்செரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம்  தீரும்

ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்த கலவையை சாப்பிட்டால் ஜீரணத்தை தூண்டி உணவை ஜீரணிக்க உதவும்.

சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து வயிற்று வலியுடன் சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இந்த கலவையை சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும். 

மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை போக்க உதவும். 

ஜலதோஷம், இருமல், இரைப்பு 


ஒரு கப் சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனும் அத்துடன் 1/4 தேக்கரண்டி இலவங்கப் பொடியை கலந்து 3 வேளை காலை, மதியம், இரவு அருந்தினால் சைனஸ், சளி, இருமல் குணமாகும்.


ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சியுடன், இலவங்கப்பட்டை, கருப்பட்டி சேர்த்து கசாயமாக்கி கொடுக்கலாம், மேலும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு இந்த கசாயத்தை அருந்தலாம்.

குளிர் காற்று காரணமாக தலைவலிக்கு இலவங்கப்பட்டை தூளை தண்ணீர் கலந்து பசை போல் செய்து நெற்றிப்பொட்டு மற்றும் நெற்றியில் தடவுவதன் மூலம் குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் கடித்தல், கடிபட்ட இடத்தில் இலவங்கப்பட்டையை அரைத்து பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

நீரிழிவை குணப்படுத்தும்

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினமும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படும்.

இலவங்கப்பட்டை நம் உடலில் இயற்கையாக இன்சுலீன் உற்பத்தியையும் தூண்டும். இன்சுலினுக்கு சமமானது பட்டை.

இருதயத்தை காக்க இலவங்கப்பட்டை

இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இருதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை மற்றும் கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும்.

இருதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் கொழுப்பு அடைப்பதால் இருதயம் இயங்க தேவையான இரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது. இதை தான் மாரடைப்பு என்போம்,

தேன் மற்றும் இலவங்கப்பட்டைப் பொடி இரண்டையும் சம அளவு கலந்து தினசரி உண்பதால் இருதயக் 
குழாய்களில் இருக்கும்  கொழுப்பு கரைந்து இருதய அடைப்பு நீங்கி, இருதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு சுவாசமும் சீராகிறது மேலும் இருதய துடிப்பு பலப்பட்டு இருதயம் சீராக இயங்க உதவுகிறது,

ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிட்டு மறுபடியும் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நம் வயது ஏற ஏற இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன.

தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி சாப்பிடலாம். அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சட்டினி போல் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். 


இருதயநோய் உள்ளவர்களுக்கு இந்த தேனும் இலவங்கப்பட்டைப் பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெற தேனும் இலவங்கப்பட்டையும் உதவுகிறது .

இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் இலவங்கமும், செலவு குறைச்சல் தானே முயற்சி செய்யுங்களேன்

நோய் எதிர்ப்பு சக்தி


தேனில் இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் இலவங்கப் பொடியுடன் கலந்து தினசரி உண்டு வந்தால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மற்றும் வைரஸ் ஜுரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது,

ஆரோக்கியமான வாழ்கைக்கு

இலவங்கப் பட்டைப்  பொடி 1 தேக்கரண்டி 3 கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து டீ செய்யவும். ஒரு நாளில் கால் கப் வீதம், 3 அல்லது 4 முறையாக பருக: 


சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், வயதாவதையும் தடுக்கிறது.

இளமையிலேயே இந்த டீயை குடித்து வந்தால், நூறு வயதுவரை வாழலாம்.

வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் மற்றும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிரானது.


ஓட்ஸ், அசைவ உணவு வகைகள், காய்கறி பொரியல், உருளைக்கிழங்கு வருவல், டீ அல்லது காபி ஆகியவற்றின் மேல் இலவங்கப் பொடியை சேர்க்க உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

புற்று நோய்

வயிறு மற்றும் எலும்பில் உண்டாகும் புற்று நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடி கலந்து தினமும் மூன்று வேளை என்று ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும்.

லுக்கேமியா மற்றும் லிம்ப்போமா புற்றுநோய் செல்களை (Leukemia and Lymphoma cancer cells) இது கட்டுப்படுத்துகிறது

இழந்த சக்தியை பெற 

வயதானவர்கள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்கள்  உடலில் சக்தி குறைவாக இருக்கும் இழந்த சக்தியை  மீண்டும் பெற தினமும் காலை ஒரு கப் மிதமான வெந்நீரில் 1 தேக்கரண்டி தேனும் அரை 
தேக்கரண்டி இலவங்கப் பொடியையும் கலந்து குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.
சிலருக்கு மதியம் ஒருவித அசதி ஏற்பட்டு பலவீனமாக உணர்வார்கள். அவர்களும் காலை மற்றும் மதியம் 3 மணிக்கு குடித்துவர, உடலில் தெம்பு ஏற்பட்டு ஒரே வாரத்தில் அசதி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் கலந்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

பெண்களுக்கான தீர்வு

இலவங்கப்பட்டைப் பொடியை தினசரி சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் நேரத்து உடல் உபாதைகளுக்கு நிவாரணம் வழங்குகிறது.
தாய் பால் சுரக்க செய்யும் தன்மை உண்டு.
இலவங்கப்பட்டை இயற்கையில் குழந்தைப் பிறப்பை தாமதப்படுத்த உதவும், குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட விரும்புகிறவர்கள் மாதவிடாய்க்கு பின்னர் இலவங்கப்பட்டைப் பொடியை 1 தேக்கரண்டி வெந்நீரில் கலந்து தினம் குடிக்க வேண்டும்.
பூஞ்சைக் காளான் பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது.

குறிப்பு

காலை என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அது பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில், மதியம் என்பது சாப்பாட்டுக்கு முன் என்றும் இரவு என்றால் அது படுக்கைக்கு செல்லும் முன் என்றும் அர்த்தம்.

தேனை நேரடியாக அடுப்பில் அல்லது மைக்ரோ ஓவன்னில் வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும். அதனால் மீதமான சுடுநீரில் மட்டுமே இலவங்கப் பொடியை சேர்க்கவேண்டும்.


இயற்கையுடன் இணைந்து வாழும் போதும் இயற்கையில் கிடைக்கும் உணவுகளை உண்ணும்போதும் அது நம் உடலுக்கு தேவையான ஊட்டமும் பலமும் தந்து நம் உடலை நோய்கள் தாக்காத வகையில் காக்கிறது. 


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 


வாழ்க வளமுடன் 


புதன், 23 டிசம்பர், 2015

Pineapple and its Benefits - அன்னாச்சிப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

அன்னாச்சிப்பழம் பூவா பழமா ?

இறைவன் நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் இயற்கை வளம். பழங்காலத்திலிருந்து இன்றுவரை, மனிதன் இயற்கை வளங்களையே சார்ந்திருக்கிறான். இயற்கையின் முக்கியத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள், இயற்கையை "இயற்கை அன்னை" என்று தெய்வமாக வழிப்பட்டனர்.

இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமானது பழங்கள். ஒவ்வொன்றிலும் பல்வேறு சத்துக்கள் இருப்பதுடன் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு பல நன்மைகளை செய்கிறது, இவற்றில் ஒன்று தான் இயற்கை அன்னையின் அதிசய படைப்பு அன்னாச்சிப்பழம்.

ஆம், அன்னாச்சி செடி பூக்கிறதே தவிர, பழம் தருவதில்லை, பல பூக்கள் ஒன்றாக சேர்த்து இறுக்கப்பட்ட ஒரு பூச்செண்டு தான் அன்னாச்சிப் பழம் என்று அழைக்கப்படுகிறது அதன் தலை பாகத்தில் சிறு இலைக்கொத்து காணப்படும்.






பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படும் அன்னாச்சியில் மாங்கனீஸ் உள்ளிட்ட பல ஊட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டு பயனடையலாமே

சத்துகள்


அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் உயிர்சத்துகள், மாங்கனீஸ், புரதச்சத்து, இரும்பு சத்துகள் ஆகியவை அடங்கியுள்ளது, 100 கிராம் அன்னாச்சிப் பழத்தில் உள்ள கலோரிகள் 5௦%

வைட்டமின் C 105%     மங்கனீஸ் 77%     காப்பர் 20% வைட்டமின் B6 11%      வைட்டமின் B1 11%     நார்ச்சத்து 9%     மற்றும் பிற சத்துகளும்,

நீர்ச்சத்து 85 % சர்க்கரை 13 % புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05  அளவிலும் சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துகளும் நிறைந்துள்ளன.

அன்னாச்சிப்பழம் உடலுக்குப் பலத்தை தருவதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.

இரத்தச்சம்பந்தமான தீர்வு தரும் அன்னாச்சிப் பழம்

அன்னாச்சிப்பழம் உடலில் போதுமான இரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தை விருத்தி செய்யும்,

இரத்தம் உறைதலுக்கு அன்னாச்சிப் பழத்தில் உள்ள மங்கனீஸ் சத்து பெரிதும் உதவுகிறது.

உள் உறுப்புகளை பலப்படுத்தும் 

அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம், அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதயத்தை பலப்படுத்தும் தன்மை உள்ளதால் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்.

அன்னாச்சிப் பழம் ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி ஜீரணக் கோளாறு ஏற்படாமல் செய்வதுடன் ஜீரணசக்தியை அதிகரிக்கும்.

வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணம் அடையும்.

அன்னாச்சிப் பழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

அன்னாச்சிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.

அன்னாசிப் பழச்சாறில் குடல் செயல்களை ஊக்குவிக்கும் தன்மை உள்ளதால் எளிதில் கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமடையும்.

பித்தத்தை நீக்கும் அன்னாச்சிப் பழம் 

பித்தக் கோளாறுகளை அன்னாச்சிப்பழம் விரைந்து குணமாக்குகிறது.

பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் ஆகியவற்றை நீக்க சிறந்த மருந்து அன்னாச்சிப் பழமாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெய்யிலில் தூசிப்படாமல் நன்றாக காயவைத்து (வற்றல் பதமாக) கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான கோளாறுகள் நீங்கும்.

கொழுப்பைக் கரைக்கும் 

அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பு கரைந்து தொப்பை குறையும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்று அல்லது அரை (பழத்தின் அளவுக்கு ஏற்ப) அன்னாச்சிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு பழம் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் சேர்த்து நன்றாகக் கிளறி கொதிக்க வைத்து இறக்கி வைத்துவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அன்னாச்சிப்பழத்தை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு மருந்தாகும் அன்னாச்சிப் பழம் 

குழந்தைகளுக்கு அன்னாச்சிப் பழம் அல்லது அன்னாச்சிப் பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும், இதில் புரதம் தாராளமாக இருப்பதால் எலும்பு வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஏற்படும்.

அன்னாசி இலைச்சாறு தேன் கலந்து 5 m.l.. குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்பூச்சிகள் அழியும். பெரியவர் 15 m.l. அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் இலைச் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுக்க, தொடர் விக்கல், இழுப்பு நோய் தீரும்.

அன்னாச்சிப் பழத்தின் பொதுவான மருத்துவ பயன்கள்

உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது.

சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

உடல் நலத்திற்குத் தேவையான உப்பு அன்னாச்சிப் பழத்தில் கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பை உடலுக்குப் பெற ஒரு கப் அன்னாச்சிப்பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

மங்கனீஸ் நம் உடலில் எலும்புகளை உருவாக்கவும், எலும்பு இணைப்பு திசுக்கள், செக்ஸ் ஹார்மோன் மற்றும் தைராய்டு சுரப்பி போன்றவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதுடன், இரத்தம் உறைதலுக்கும், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தவதிலும் முக்கிய பங்குவகிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்குகிறது, நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை உணவிலிருந்து பிரிக்கிறது.

அன்னாச்சிப் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டால் உடல் ஆரோக்கியம், பளபளப்பு மற்றும் உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடையது, கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.

அன்னாச்சிப் பழச்சாற்றின் பயன்கள்

அன்னச்சிப்பழச்சாற்றை சிறிது நேரம் தொண்டையில் படும்படி வைத்திருந்து விழுங்கி வர தொண்டைப்புண் தொண்டைவலி தீரும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.

அன்னச்சிப்பழச்சாற்றை ஒரு நாள் நான்கு வேலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

அன்னாசிப்பழச்சாற்றுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, தலைவலி, கண் நோய்கள், காது நோய்கள், பல் நோய்கள், தொண்டை நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட  

உடல் பலம் கூடும், உடலில் வீக்கம் ஏற்படாது, உடல் பளபளப்பாகும், உடலுக்கு அழகைத்தரும், முகம் பொலிவு பெறும், கண் ஒளி பெறும்.

உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது சோர்வின்றி செயல்பட வைக்கிறது.

அன்னாசிப் பழத்தின் மறுபக்கம் 

இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.


இனிப்பு மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் அன்னாச்சிப் பழத்தில் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தக்கூடிய தன்மை இருந்தாலும் இப்பழத்தில் இயற்கையில் சர்க்கரை சத்து இருப்பதால் நீரழிவு நோயாளிகள் இப்பழத்தை அதிகம் உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். அதனால் இப்பழத்தை தவிப்பது நல்லது.

நீங்கள் அன்டிபையடிக்ஸ் (Aantibiotics) மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.

பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.

அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் கரை ஏற்படும் பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகள் கொண்டவர்கள் அன்னாசி பழத்தை
அதிகம் உட்கொள்ளவேண்டாம்.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனை போக்க அன்னாசிப் பழத் துண்டுகளை உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும்,

அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

முடக்குவாதம் மற்றும் கீழ்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி (அமிலத்தன்மை) உள்ளது அதனால் சிலருக்கு இதை உட்கொண்ட கொண்டவுடன் வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும் சிலருக்கு வயிற்று வலி கூட ஏற்படலாம்.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும், 

என்ற பழமொழியை மனதில் கொண்டு 
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பலத்தை தரக்கூடிய அன்னாச்சிப் பழத்தை அளவோடு சாப்பிட்டு பயனடையலாம்.


திகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய, இயற்கையின் வளங்கள் தன்னை நகரமயமாவதற்கும் தொழில்மயமாவதற்கும் அர்ப்பணிக்கிறது அதனால் நீர் இல்லாத ஆற்றுப்படுகை, மாசடைந்தக் காற்று மற்றும் வன உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இயற்கை வளங்கள் தன்னை தானே அழித்துக் கொள்கிறது, இயற்கை அன்னையை இந்த அழிவிலிருந்து காப்பாற்ற நம்மால் மட்டுமே முடியும், முடிந்த வரை நம் வீட்டை சுற்றி மரங்களும் செடிகளும் வளர்த்து இயற்கை அன்னையை காப்போம்.

இயற்கை அன்னையை காப்போம்....!

வியாழன், 17 டிசம்பர், 2015

Guava Health Benefits - கொய்யாவின் மருத்துவ குணங்கள்

இந்தியாவின் நான்காவது சிறந்த பழம் எது தெரியுமா ? 

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் தாவரங்கள், இவைகள் ஏதாவது ஒருவகையில் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, அதாவது உணவாகவும், மருந்தாகவும், இருப்பிடங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. ஆதிகால மனிதனுக்கு உணவாக கிடைத்தது பழங்கள் மட்டுமே. பழங்கள் சாப்பிடுவதால் நம் உடலில் உருவாகும் அனைத்து நோய்களுக்கும் தீர்வு கிடைப்பதுடன் நம் உடலுக்கு தேவையான உயிர்சத்துக்களும் கிடைத்து விடும்.

இயற்கை நமக்கு அளித்த பழங்களில், விலை மலிவாகவும் நம் உடலுக்கு தேவையான அனைத்து நோய் எதிர்ப்புச் சக்தியையும், பல்வேறு மருத்துவக் குணத்தையும் தன்னகத்தே குவித்து வைத்துள்ள பழம் கொய்யாப் பழம் ஆகும்.  இந்தியாவின் நான்காவது சிறந்த பழமாக கருதப்படும் கொய்யாப்பழத்தின் மணம் மற்றும் சுவை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.

கோடைக்காலங்களில் அபரிமிதமாக விளையும் கொய்யாப்பழம் தற்போது உயர் தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் கிடைக்கிறது. இது வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இதன் கிளைகள் வழுவழுவென்றும், இலைகள் தடித்தும் காணப்படும்.

கொய்யாப்பழம் 







கொய்யாவில் பலவகைகள் உள்ளன, அவற்றில் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும். தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை, சிவப்பு மற்றும் ரோஸ் நிறத்தில் உள்ளன. ஆனால், மருத்துவப் பயன் ஒன்றுதான்.

இதன் பயன் தரும் பாகங்கள் : இலை, வேர், காய் மற்றும் பழம்.

வேறு பெயர்கள் : ஜாம்பலா, கோவா, பலாம்பர்

சத்துகள்

கொய்யாபழத்தில் வைட்டமின் B மற்றும் C ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஈரப்பதம் - 81.7 %  , புரதம் - 0.9 %. , கொழுப்பு - 0.3 %. ,

மணிச்சத்து - 0.7%. , நார்ச்சத்து - 5.2 % , மாவுச்சத்து - 11.2% ,

கலோரி அளவு - 51

கால்சியம் - 10 மி.கி. ,  பாஸ்பரஸ் – 28 மி.கி. ,

இரும்புச்சத்து - 0.27 மி.கி. ,  வைட்டமின் ’சி’ - 210 மி.கி.,

வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் - சிறிதளவு.

கொய்யாப் பழங்களிலும், விதையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

கொய்யாப் பழம் மற்றும் காய் [காய்க்கும் பழத்திற்கும் இடையே உள்ள நிலை] நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

கொய்யா என்று குறிப்பிடுவது கொய்யாப்பழம் மற்றும் காயை. 

கொய்யா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 

பற்களை பாதுகாக்கும் கொய்யா

பற்களில் இரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவற்றை சரி செய்து பற்களையும், ஈறுகளையும் வலுவாக்கும்.

வாய்ப்புண்ணை குணமாக்கும்.

கொய்யா இலையை வாயில் இட்டு மென்று, அப்படியே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், ஆடும் பற்கள் கெட்டிப்படும், பற்சொத்தை நீங்கும், பல் வலி குணமாகும் பல்லில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் வெண்ணிறமாகும் .

இலையை காய்ச்சி கொப்பளித்தால் ஈறு வீக்கம் குணக்கும்.

தோல் நோய்களை குணப்படுத்தும் கொய்யா

முகத்தில் ஏற்படும்  தோல் வறட்சியை நீக்கி பொலிவை தரும்.

சொறி, சிரங்கு  இருப்பவர்கள் கொய்யா சாப்பிட்டு குணப்படுத்தி கொள்ளலாம்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்

வயிற்று நோய்களுக்கு நிவாரணம் தரும் கொய்யா 

இன்றைய உணவுகளில் இரசாயன கலப்பு அதிகம் இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் உள்ளுறுப்புகளாகிய செரிமான உறுப்புகள் [வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல்] பலப்படும்.

மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தினம் சாப்பிட்டு பயன் பெறலாம். உடலில் உள்ள கழிவு வெளியேறாமல் இருப்பதே பல நோய்கள் நம்மை தாக்க காரணமாக அமைகிறது. .

ஆரம்ப நிலையில் உள்ள மூல நோய்க்கு கொய்யப் பழமே சிறந்த மருந்து.

கொய்யாக்காய் வயிற்றுப் புண்களையும், வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப் போக்கையும் குணமாக்கும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.

ஒரு கைப்பிடி கொய்யா இலையை ஒரு மிளகாயுடன் இரும்பு கடாயில் லேசாக வதக்கி ஒன்றுக்கு கால் பங்காக (ஒரு லிட்டர் தண்ணீர் என்றால் கால் லிட்டர் ஆகும் வரை) காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் குடிக்க காலராவால் ஏற்படும் வாந்தி, பேதி மற்றும் வயிற்று மந்தம், குமட்டல், நாவறட்சி அடங்கும்.

கொய்யா இலையை தண்ணீரில் காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு குடிக்க வாந்தி பேதி குணமாகும். 

கொய்யாக் கொழுந்து இலையை மென்று உண்ண உணவு செரியாமை, வயிறு மந்தம், குடல் வாயு தீரும்.

இரண்டு கைப்பிடி கொய்யா இலையை இரும்பு கடாயில் லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளுக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும்.

அல்லது

கொய்யா மரத்தின் மெல்லிய வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடி ஊறவைத்து, இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தாலும் மூலம் சுருங்கி விடும்.


  • குறிப்பு : இரண்டு முறைகளிலும் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.


இரத்தச் சுத்திகரிப்பில் கொய்யா


இரத்தச் சோகை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் 48 நாட்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள இரும்புச் சத்து இரத்தச் சோகை குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுப்பதுடன் இரத்தத்தை சுத்திகரித்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும்.

காயம் ஏற்பட்டு அதிக இரத்தம் வெளியேறும் போது கொய்யா இலையை அரைத்து பூசினால் இரத்தம் நிற்கும் காயமும் விரைவில் குணமாகும்.

இரத்த அழுத்தம்

கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

நீரழிவு நோயை தடுக்கும் கொய்யா 

கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

கொய்யா இலை டீயின் மகிமை

கொய்யா மரத்தின் தளிர் இலைகளை ஒரு கைப்பிடி பறித்து நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேநீர் போல் அருந்தி வந்தால். 

உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறையும், இரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தும்.

இதயப் படபடப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.

வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வயிற்றுப் புண் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்.

பாக்டீரியா காரணமாக அல்லது காரணம் தெரியாமல் ஏற்படும் வயிற்றுப் போக்கு குணமாகும்.

சிறுநீர் நன்கு பிரியும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

அல்சர் நோயை மற்றும் குடல் புண் குணமாகும்.

இருமல், தொண்டைப் புண் குணமாகும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

  • குறிப்பு : கொய்யா இலை டீக்கு இனிப்பு தேவை என்றால் பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.

புற்றுநோய்யைத் தடுக்கும் கொய்யா 

வியாதிகள் பல இருந்தாலும் உலகமே நடுங்கும் வியாதியான புற்றுநோயை கூட தடுக்கும் சக்தி கொய்யாவுக்கு உண்டு. புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொய்யாவில் நிறைந்து இருகின்றன.

புற்றுநோய் இருபவர்கள் கொய்யாவை தினம் சாப்பிட்டு வந்தால் நோயின் தன்மை குறையும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் C சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது

குழந்தைகளுக்கு அளவோடு கொய்யா கொடுத்து வந்தால் எலும்புகள் பலப்படும் உடல் வளர்ச்சி அடைவதோடு பற்களும் பலமடையும்.

மூளைக்கு சக்தி கொடுக்கும் தன்மை கொய்யாவில் இருப்பதால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

தோல் புண்களால் அவதிப்படும் குழந்தைகள் கொய்யா சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.

கொய்யா வேர்ப்பட்டை நன்கு சுத்தம் செய்து சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரிலிட்டு நன்றாக கொதிக்க வைத்து கசாயமாக்கி ஆறிய பின் குழந்தைகளுக்கு (5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்) கொடுக்க வயிற்றுப் போக்கினை குணப்படுத்தும்.

அல்லது

கொய்யா மரப்பட்டையை நன்கு சுத்தம் செய்து சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரிலிட்டு நன்றாக கொதிக்க வைத்து கசாயமாக்கி ஆறியபின் குழந்தைகளுக்கு (5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்) கொடுக்க வயிற்றுப் போக்கு, இழுப்பு மற்றும் வலிப்பு போன்ற வியாதிகள் குணமாகும்.

நரம்புகளை பலப்படுத்தும் கொய்யா

கொய்யாவை தினமும் உணவோடு உண்ண நரம்புகளைப்  பலப்படுத்தும், நரம்புத் தளர்ச்சி குறையும், வலிப்பு நோய்க்கு சிறந்த மருந்து கொய்யா.

கொய்யாவின் இதர பயன்கள்

மழைக் காலங்களில் எளிதில் தொற்று நோய்கள் ஏற்படும் அதனால் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகளை இரத்தத்தில் இருந்து அழிக்கும்.

கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும்

உடலின் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியடைச் செய்யும். 


பசியே எடுக்காதவர்கள் நன்கு பழுத்த கொய்யாப் பழம் ஒன்று சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

அடிக்கடி விக்கல் வந்து சிரமப்படுபவர்கள் குணம் பெறலாம்.

ஆண்களின் விந்தணுகளை பெருக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு . 

கொய்யாமரப் பட்டையை கசாயமாக்கி குடித்தால் காய்ச்சல் நீங்கும்.

  • கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதே போன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் அளவோடு சாப்பிடவும் (சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்).

கொய்யா பழத்தை முழுப்பழமாக, ஜாமாக, ஜெல்லியாக, ஐஸ் கிரீம்மாக, சர்பத்தாக எந்த முறையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

கொய்யா ஜாம்

கொய்யா ஜாம் பொதுவாகக் கடைகளில் கிடைக்காத ஒன்று.

செய் முறை :

  • கொய்யாப் பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கொய்யாவின் சம அளவுக்கு சர்க்கரை எடுத்துக் கொண்டு பின் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து கைப்படாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். விழுதுப் பதம் வந்தவுடன் கீழே இறக்கி ஒரு சிட்டிகை சிட்ரிக் ஆசிட் அல்லது எலுமிச்சைப் பழம் , மஞ்சள் ஃபுட் கலர் சேர்க்கவும்.  (கலர் தவிர்க்க நினைபவர்கள் மஞ்சள்தூள் சேர்க்கலாம்) கொய்யா ஜாம் ரெடி. 

கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கலாம்.

நோய்களால் அவதிப்படுபவர்களும் மற்றும் நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் தினமும் ஒரு கொய்யாப்பழம் உண்டு நோயின்றி வாழலாம்

கொய்யாப்பழத்தை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். எந்த பழமாக இருந்தாலும் கழுவி உண்பது நன்று.

பழங்களின் சுவை அதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்தே அமைகிறது. பொதுவாக அமிலத்தன்மை அதிகம் இருந்தால் புளிப்பும், சர்க்கரை சத்து அதிகம் இருந்தால் இனிப்பும், அமிலமும், சர்க்கரையும் சம அளவில் இருந்தால் புளிப்பும், இனிப்பும் கலந்து இருக்கும்.

மருத்துவத் தன்மை கொண்ட நமது பாரம்பரிய உணவை மறந்ததால் நாம் பல்வேறு நோய்க்கு ஆளாகிறோம் அதனால் இயற்கை முறையில் கிடைக்ககூடிய உணவை உண்டு நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

எப்போதும் நாம் இயற்கையை சார்ந்து வாழ்ந்தால் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

வாழ்க வளமுடன்



திங்கள், 14 டிசம்பர், 2015

Papaya and Its Benefits - பப்பாளியின் மருத்துவ பயன்கள்

பழங்களின் பயன்கள் 

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் உணவு முறையில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பழத்தை ருசிக்காத மனிதர்கள் உலகில் இல்லை என்றே சொல்லலாம்.   பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள்  பழத்திற்கு பழம் மாறுபடுவதோடு நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. 

பழங்களைத் தினமும் சாப்பிட்டால் நமது மூளை சுறுசுறுப்படையும், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பரீட்சைக்குத் தயாராகும் குழந்தைகள் பழம் சாப்பிடுவது நல்லது. அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் ஏற்பட்டு புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, கண் நோய்கள், மன அழுத்தம் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம்.

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். பணத்தை உடலை கெடுக்கும் பலவித உணவுகளுக்கு செலவழிக்கிறோம்? அதற்குப் பதில் பழங்களை வாங்கி சாப்பிட்டுப் பயனடையுங்கள். பழங்களை பழரசமாகவும்  சாப்பிடலாம். தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டால்தான் அதன் முழு பலனை நாம் அறிய முடியும்.  பழம் அல்லது பழரசம் எதுவாக இருந்தாலும் உணவு சாப்பிடுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம் 

பொதுவாக மக்கள் மனதில் பழங்கள் என்றால் விலை உயர்ந்தவை என்றும், 
 மலிவாக பழங்கள் கிடைத்தால்   அதில் சத்தும்  நன்மையையும் இருக்காது என்று   நினைப்பது தவறாகும். மலிவான விலையில் அனைத்து காலங்களிலும் சத்தும் நன்மையையும்  இனிப்பும் நிறைந்த ஒரு பழம் என்றால் அது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள பப்பாளி என்றே கூறலாம்,  இன்னும் கூறப் போனால் பலரது வீட்டு தோட்டத்தில் பப்பாளி மரம் இருக்கும். இதில் வைட்டமின் A, B, C, E, K, இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன.

பப்பாளி பழத்தை மூன்று வேளை உணவில் சேர்த்து கொள்வது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும் நன்மையை தரும் காலை டிபனுடன் பழச்சாறாகவும், மதிய உணவுடன் சாலட்டாகவும் இரவு உணவில் துண்டுகளாகவும் சாப்பிடுவது நன்மையை தரும். 

சாப்பிடுவதற்கேற்ப பப்பாளியை தேர்ந்தெடுப்பது எப்படி 



இளம் சிவப்பு நிறத்தில் தொட்டால் மென்மையாக இருக்கும் பப்பாளிப்பழம் உடனே சாப்பிட உகந்தது. ஆங்காங்கே மஞ்சள் திட்டுக்கள் உள்ள பழத்தை ஓரிரண்டு நாட்கள் பழுக்கவைத்துச் சாப்பிடலாம். பச்சை நிறப் பப்பாளியை (காய்) கூட்டாகச் சமைக்கலாம் அல்லது சிலவகை சாலட்களில் சேர்க்கலாம். ஆனால், இனிப்பு இருக்காது. அதேபோல, அதிக அளவில் பழுத்த பப்பாளியும் வாங்கக் கூடாது.

பப்பாளியில் மிக குறைவான கலோரி  உள்ளது, அதாவது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன.  நம் உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரை உருவாகும் அனைத்து  நோய்களையும் குணப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு உள்ளது.

மருத்துவ பயன்கள்


தோல் நோய்கள்

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் மசாஜ் செய்த பின் மிதமான வெந்நீரில் கழுவி வர முகச் சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

வறண்ட தோலை அகற்றி புதிய தோலை உருவாக்கும் அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு, பப்பாளி பழத்தை நன்றாக பிசைந்து வறண்ட தோலில் பூச வேண்டும், மேலும் தோலில் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் காயங்களுக்கும் பப்பாளியை மேல் பூச்சாகவும் பூசலாம்.

முகம் கரடு முரடாக இருபவர்கள் பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வெந்தவுடன் அதை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள், தொடர்ந்து செய்து வர முகம் மென்மையாக மாறி விடும்.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயை நறுக்கி உட்பகுதியை மென்மையாக முகத்தில் தேய்த்தால் முகப்பரு மற்றும் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

கண் நோய்கள்

தினம் உணவில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கலாம். கண் பார்வையை அதிகரிக்க, பார்வை சம்பந்தமான கோளாறுகளை சரி செய்ய மற்றும் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய கண் புரை நோயை போன்ற நோய்களை குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் பப்பாளி பழம் சிறந்ததாகும்.


பல்

பல் வலி மற்றும் சொத்தை வராமல் தடுக்கக்கூடிய சக்தி பப்பாளி பழத்திற்கு உண்டு.

இருதயம்

பப்பாளியில் உள்ள நார்ச் சத்து கொழுப்பை உடலிலும் ரத்தக் குழாய்களிலும் சேர்வதை தடுக்கிறது, மேலும் இருதயத்திற்கு வலிமை கொடுத்து இருதயம் பாதிப்பில்லாமல் இயங்க உதவுகிறது. இதனால் இருதய வலி மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் வராது.

சிறுநீரகம்

பப்பாளி பழம் சாப்பிட்டால் சிறுநீர்க் கோளாறுகள் ஏற்படாது, மேலும் சிறு நீர்ப்பையில் கல் உருவாகாமல் தடுக்கவும் 
உருவாகி இருந்தால் கரைக்கவும் சாப்பிடலாம். 

உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பப்பாளி

பொதுவாக நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றினால் பல நோய்களை தடுக்கலாம், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் உருவாகி இளமைப் பொலிவோடு வாழலாம் .

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதுடன் உண்ட உணவில் உள்ள கழிவும் முறையாக வெளியேறும் அதாவது மலச்சிக்கல் பிரச்சனைக்கு பப்பாளி ஒரு நல்ல மருந்தாகும்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்ற பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு சாப்பிட அனைத்துக் கழிவுகளும் அகற்றப்படும்.

வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, வாயுத் தொல்லை, சாப்பிட்டவுடன் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், அல்சர் நோய்களுக்கு அருமருந்து பப்பாளி.

பப்பாளியில் உள்ள வைட்டமின் A, C, மற்றும் E சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன.

“பட்டினிச் சிகிச்சை” என்னும் இயற்கை மருத்துவச் சிகிச்சை இருப்பவர்கள் (ஒரு வாரம் எந்த திட உணவும் சாப்பிடாமல் இருப்பது) பப்பாளிச் சாறு மற்றும் வெள்ளரிச் சாறு மட்டும் பருகி வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப் புழுக்கள் வெளியேறும்.....!

கல்லீரல், மண்ணீரல் நோய்க்குப் பப்பாளியின் பங்கு 


தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், கணைய வீக்கம் மற்றும் கோளாறுகளும் தீரும், இது சம்பந்தமாக சிகிச்சை எடுப்பவர்கள் பப்பாளியை தாராளமாக உண்ணலாம்.

கணையம் என்பது நம் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும், இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் பப்பாளி பழம் மற்றும் பப்பாளி காயை சாப்பிடலாம்.

பித்தத்தைப் போக்கும் தன்மை பப்பாளிக்கு உண்டு.

நரம்பு பிரச்சனைகள்

பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்புகள் பலப்பட்டு நரம்பு தளர்ச்சி குறையும் மேலும் நரம்பு வலிகள் குணமாகும்.

பெண்களுக்கான குறிப்புகள்  


சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு பப்பாளி பழம் மற்றும் காய் அருமருந்தாகும். ரத்த விருத்தியும் ஏற்படும்.

பிரசவித்த பெண்கள் பால் சுரப்பு குறைவு இருந்தால் பப்பாளிக் காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் மேலும் தேவையற்ற சதைகள் கரையும்.

கர்ப்பிணிப் பெண்கள் 5 மாதத்தைக் கடந்த பின் சிறிய துண்டு பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளிப் பழத்தை தயிரில் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். பப்பாளி கலந்த ஷாம்புக்களையும் பயன்படுத்தலாம்.

பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து தைலப்பதம் வரும் வரை காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். இந்த எண்ணையை காயம் பட்ட இடத்தில் பூசினால் காயம் வரைவில் குணமாகும்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி
துரிதமாகும்.  பல் உறுதியாகும்,  மூளையை சுறுசுறுப்படைய வைத்து நினைவாற்றலை பெருக்கும். 

குறிப்பு : கர்ப்பிணிப் பெண்கள் முதல் 2 மாதங்களுக்கு பப்பாளிப் பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

மூளைக்கு சக்தியை கொடுக்கும் பப்பாளி

மூளைக்கு சக்தியுட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உள்ளதால் மன அழுத்தம் உடையவர்கள் பப்பாளி பழத்தை தினசரி சாப்பிடலாம், மூன்று வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் மனநோய் குணமடையும்.

இரத்தத்தை சுத்திகரிக்கும் 


இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றவும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தவும் இரத்த விருத்தி உண்டாகவும் பப்பாளி உதவுகிறது.

நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.

காயங்களை குணமாகும் பப்பாளி காயின் பால்

பப்பாளி காயில் சுரக்கும் பாலை காயம் பட்ட இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமாகும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் சரியாகும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

இலை மற்றும் விதையின் பயன்கள்

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் பற்று போட கட்டி உடையும். பப்பாளி இலைகளை பிழிந்து சாறு எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளி இலையின் பொடி யானைக்கால் வியாதியை சரியாக்கும், இலையின் சாறு விஷ ஜுரத்தையும், சிக்குன் குனியா காய்ச்சலையும் குணமாகும்.

பப்பாளி பழம் மற்றும் காய்  ஆண்களுக்கு விந்துவின்  உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும்,

உடல் எடையை குறைக்க பப்பாளி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதற்கான டயட்டுடன் பப்பாளிக் காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கூட்டாக சமைத்து சாப்பிடுவதுடன் தினமும் காலை பப்பாளிப்பழத்தை உட்கொண்டால் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

உடல் எடை காரணமாக மூட்டுவலி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் பப்பாளி

புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது


பப்பாளியில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கக் கூடிய சக்தி இருக்கிறது.

ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும்.


பப்பாளி பழத்தின் இதர சிறப்புகள் 


அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

பப்பாளிப் பழத்தினை நேடியாக வெட்டிச் சாப்பிடுவதே சுவை மற்றும் பலன், அதை இன்னும் சுவையாகச் சாப்பிட, அதன் மேல் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

பழ சாலட்கள் தயாரிக்கும்போது, அவசியம் பப்பாளியையும் சேர்க்க வேண்டும், ஏனெனில் மற்ற பழங்களை கனிந்துவிடாமல் பப்பாளிப் பழம் காக்கும். பப்பாளியின் கறுப்பு நிறக் விதைகளைக்கூட சாலட்களில் சேர்க்கலாம், அதற்கு மிளகைப் போன்ற சுவையும் நறுமணமும் உண்டு மேலும் விதையின் சத்தும் உடலில் சேரும்.

விதைகள் அதிகம் உள்ள நாட்டு பப்பாளி பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இறைவன் நமக்கு அளித்த மரங்கள் நமக்கு விருந்தளிக்க 
காத்திருக்கின்றன, ஆம் காய்த்து, கனிந்து தொங்கிக் கொண்டு இருக்கும் பழங்களை நாம்  சாப்பிடுவதால்  இயற்கைக்கு  உறுதுணையாக இருக்கிறோம். எப்படி என்றால் பழத்தைத் தின்று விதையை வீசி எறிகிறோம், அது முளைத்து மரமாகி நமக்காக காத்திருக்கிறது. 

தன் இனத்தை பரப்ப நம்மை எதிர்பார்த்துத்தான் மரத்தில் பழுத்துத் தொங்கும் பழங்கள் காத்திருக்கின்றன.


வாருங்கள்

மரம் வளர்ப்போம் இயற்கையை காப்போம்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

Uses for ACALYPHA INDICA - குப்பைமேனி மூலிகையின் மருத்துவ குணங்கள்

குப்பைமேனி மூலிகை ஒரு அறிமுகம்.......


தாவரப்பெயர்    :- ACALYPHA INDICA.
குடும்பம்               :- EUPHORBIACEAE.



மூலிகை என்றால் காடுகளில் மட்டும் கிடைக்கக் கூடியது என்று நாம் நினைப்போம், ஆனால் அப்படி அல்ல, மூலிகைகள் காடுகள் தவிர நமது வீட்டருகே, சாலை ஓரங்களில், தோட்டங்களில், வயல் வரப்புகளில் என்று ஏராளமாக  வளர்கின்றன, நாம் களைகள் [வேண்டாத செடிகள்] என்று ஒதுக்கும் புல், செடி, கொடிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மருத்துவத் தன்மை இருக்கும், அவற்றில் சிலவற்றை கற்ப்பக மூலிகைகள் என கூறுவார்கள். அதில் ஒன்று தான் குப்பைமேனி மூலிகை. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்த குறுஞ்செடி இது சுமார் 50 செ.மீ. உயரம் வளர கூடியது.

இது இந்தியாவில் அநேக இடங்களில் காணப்படும் செடி, இதன் இலை பச்சை நிறத்தில் முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகு அளவில் பச்சையாக இருக்கும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். 

















பெயர் காரணம்.............. 


“குப்பை போல் ஆகிவிட்ட மேனியை சீர்படுத்தி பொன்மேனி ஆக்கும்“ 

தன்மை கொண்டதால் இந்தப்பெயர் பெற்றது என்று கூறலாம், இதன் வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. 



மருத்துவ குணங்கள் :

தோல் நோய் நீக்கும் குப்பைமேனி........................



  • குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர சிரங்கு மற்றும் உடல் அரிப்பு நீங்கி சருமம் பொலிவுபெறும். 

  • குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்கள் மீது வைத்து கட்டினால் எந்த வகையான புண்ணும் குணமாகும் மேனி மீண்டும் எழிலோடு விளங்கும். 

  • குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும்.

  • குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

  • பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி (Facial) வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகமும் அழகும் பெறும்.  

  • பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் ரோமம் முளைத்து இருக்கும் அவர்கள் குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மீசை இருக்கும் பகுதியில் இரு வாரங்கள் பூசி வந்தால், முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் படுக்கைப் புண் உள்ள இடத்தில் வைத்து கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். 

  • குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர முகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

வயிற்றுப் பிரச்சினைகளை குணபடுத்த .............


  • குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 1/2 ஸ்பூன் அளவு தேனில் அல்லது மிதமான வெந்நீரில் கலந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப் புழுக்கள், குடல்ப் புழுக்கள் வெளியேறும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

  • குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. அளவு பெரியவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டு வந்தால் வாயுப்பிடிப்பு நீங்கும், குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும், சரும நோய்கள் அகலும், சுவாச நோய்கள் நீங்கி உடலும் ஆரோக்கியம் பெறும்.

  • குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி ஆகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.

  • 10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் மற்றும் கிருமிகள் வெளியேறும்.

  • குப்பை மேனிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக பருக குடலிலுள்ள பூச்சிகள் அழியும். 



வலி நிவாரணம் பெற............... 


  • தலை பாரத்தால் ஏற்பட்ட தலைவலி குணம் பெற குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து நன்றாக சலித்து வைத்து அந்த பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைபாரம் உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். 

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு  எண்ணெயில் வதக்கி இளஞ் சூட்டுடன் மூட்டு வீக்கம் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும், வாத வலி உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வாத வலி தீரும்.

  • குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

  • குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சினால் உப்பு மட்டும் மிகுந்து விடும் இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர வாயு, அஜிரணம் மற்றும் வயிற்று வலிக்கு சிறந்த மருந்து. 

பூச்சி கடி விஷக்கடிக்கு.............. 


  • குப்பை மேனி இலையை மை போல் அரைத்து வண்டு, தேள், பூரான், பாம்பு, வெறிநாய்க்கடி மற்றும் எலிக்கடியின் கடிபட்ட இடத்தில் பத்து போட விஷம் முறியும். 

  • குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்த்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி (என்ன கடித்தது என்று தெரியாத போது) முதலியவை குணமாகும். மேகப்புண்ணும்  (பிறப்புறுப்புகளில், மலக்குடல், வாய் அல்லது விரல்களில் வலியற்ற புண்)  குணமடையும் .

  • குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட எல்லா வகையான கடியின் விஷமும் முறியும். இந்த சமயத்தில் வாந்தியும் பேதியும் உண்டாக்கும். (உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)



மலச் சிக்கல், மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.


  • குப்பைமேனி இலையை அல்லது வேரை கைப்பிடியளவு எடுத்து சீரகம் சேர்த்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். 

  • குப்பைமேனி சமூலத்தை (சமூலம் என்றால் இலை, தண்டு, பூ, காய், வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் எட்டு விதமான பவுத்திர நோய் தீரும்.

  • குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

  • மூலநோய் ஒரு சிக்கலான நோய். அறுவை செய்தாலும் வளரும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் (பொடி) செய்து இதில் 2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் கலந்தும் சாப்பிடலாம். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் கோழைச் சளி..........................


  • குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து (வாந்தி அல்லது பேதியாக) கோழையை அகற்றும், இருமலைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை குணப்படுத்தும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

  • குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். 

  • கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். 

  • ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

  • குப்பைமேனி இலைச்சாற்றை 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வர சுவாச நோய்கள் குணமாகும்.

சில பொதுவான மருத்துவ குணங்கள்..........


  • குப்பைமேனி, முருங்கைக்கீரை இரண்டையும் நல்லெண்ணையில் வதக்கி வேறு எதுவும் சேர்க்காமல் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் உடல் எடை குறைவது நன்றாக தெரியும். 

  • குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் வாதம், நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும். சித்த பிரமை குணமடைய வாய்ப்பு உண்டு. .



பேதி மருந்து தயாரிக்க குப்பைமேனி பயன்படுகிறது. 



எப்போதும் எந்த மூலிகைகளையும் உள்ளுக்கு சாப்பிட எடுத்துக் கொள்ளும் போது முதலில் சிறிது அளவு உபயோகித்துப் பார்த்து பின் தொடர்வது நல்லது.  இது அனைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும்.



குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.


வாழ்க வளமுடன் 

வியாழன், 3 டிசம்பர், 2015

Tips for Arthritis Pain Relief - மூட்டு வலியை தீர்க்கும் வழிகள்

மூட்டு வலி என்றால் என்ன ? 

அன்றைய காலகட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கி வந்த மூட்டு நோய் இன்று வாழ்க்கை முறை மாற்றத்தால் 35 வயது இளைஞர்களையும் பாதிக்கிறது. மூட்டு நோய் என்பது மூட்டு இணைப்புக்களில் வலி, வீக்கம் மற்றும் செயல்பாடு குறைவு ஆகியவற்றைக் குறிக்கிறது. மனிதனின் செயல் பாட்டுக்கு கை, கால் எலும்பு மூட்டுகள் வலுவாகவும், வலி இல்லாமலும் இருக்க வேண்டும். அப்போதுதான் சோர்வு இன்றி உழைக்க முடியும். மூட்டு வலியால் 
அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களை இந்நோய் அதிகமாக பாதிக்கிறது.


மூட்டு வலிக்கு காரணம் .......

மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப உடலில் இயற்கையாகவே வளரக் கூடியது நகம், முடி, மூட்டு எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு. மூட்டு வலிக்கு முக்கிய காரணம், மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு அழியும் போது, மூட்டுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உரசி கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. மூட்டுகள் பலமாக இருக்க நம் உடலை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

[மூட்டுகளுக்கிடையே தேய்மானம் ஆவதால் மூட்டு வலி ஏற்படுகிறது இதை நாம் எலும்பு தேய்மானம் என்று அர்த்தம் கொள்கிறோம்] 

மூட்டு வலி ஏற்பட காரணங்கள்.........

  • வயதின் காரணமாக உடல் பலவீனம் அடைகிறது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு செயல் இழந்து மூட்டில் வலி ஏற்படுகிறது.
  • மூட்டின் மேல் காயம் ஏற்பட்டு இரத்தக் கசிவு மற்றும் இரத்தம் உறைந்து போவதால் வலி ஏற்படும். 
  • மூட்டி சிப்பி விலகுதல் மற்றும் மூட்டு இணைப்பு சவ்வு சரியான வளர்ச்சி அடையாதபோது. 
  • சுளுக்கு மற்றும் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு காயங்கள். 
  • இடுப்பிலிருந்து மூட்டு பகுதிக்கு செல்லும் தசைநார்களில் [தொடை பகுதி] காயம் ஏற்படுதல். 
  • உடற்பயிற்சியின்மை மற்றும் உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மூட்டு நோய்கள் ஏற்படுகின்றன.
  • அதிக உடல் எடை, அதிக நேரம் ஓரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு மற்றும் அதிக பளுவான பொருட்களை தூக்கும் வேலையில் ஈடுபடுவர்களுக்கும் மூட்டு வலி வர வாய்ப்பு உள்ளது. 
  • மன உளைச்சல், சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பில் ஏற்படும் கோளாறுகள் எனப் பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்பட்டு உழைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மூட்டு வலியைக் குறைக்க உதவும் வழிகள்......... 

மூட்டு வலியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இயற்கை முறை மருந்து வகைகளை தொடர்ச்சியாக 3 மாதம் முதல் 6 மாதம் வரை வலியின் தன்மைக்கு ஏற்ப எடுத்து வந்தால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து 100 சதவீதம் முழு நிவாரணம் பெறமுடியும்.


வெளி மருந்தாக உபயோகிக்க :


  • முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
  • கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் வலி குறையும்
  • வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
  • நொச்சி இலைச்சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும்.
  • கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.
  • உடைமர இலை ஒரு கைப்பிடி மற்றும் மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் வலி குறையும்.
  • அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலிக்கு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
  • முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தை அரைத்து கடுகு எண்ணெயுடன் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
  • பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் வலி குறையும்.
  • புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் வலி குறையும்.
  • அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
  • குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன், எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் வலி குறையும்.
  • செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டில் வைத்து கட்டினால் மூட்டு வலி குறையும்.
  • அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட வலி குறையும்.
  • நிலக் கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட வலி குறையும்.
  • எள் (நல்ல) எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு ஒரு கடாயில் ஊற்றி சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை சிறு அளவு சேர்த்து தைலம் பதம் வரும் வரை காய்ச்சி. ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.
  • பச்சை கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
  • சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசவும்.
  • வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி மற்றும் எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
  • சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.
  • சரக்கொன்றை மர விதையை நன்றாக அரைத்து வலி உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்
  • அத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
  • சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
  • நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.
  • வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
  • மூட்டு வலி குணமாக அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.


உள் மருந்தாக சாப்பிட..............


  • முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். இந்த இலையை பொடியாக்கி வெந்நீரில் கலந்து அருந்தலாம், முடக்கற்றான் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த மருந்து 

  • முடக்கற்றான் சூப் 

தேவையான பொருட்கள்.....

முடக்கற்றான் கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை......

முதலில் முடக்கற்றான் கீரையை நன்கு கழுவி ஆய்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் ஊற்றவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். சுவையான, ஆரோக்கியமான முடக்கற்றான் சூப் ரெடி.



  • தோசை போல் சுட்டு சாப்பிடலாம் 

இரண்டு கைப்பிடி முடக்கற்றான் கீரையை மை போல் அரைத்து தோசைமாவுடன் (பெரிய கிண்ணம் அளவு) கலந்து தோசை சுட்டால் கீரையின் கசப்பு தெரியாது, காரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

  • லவங்கபட்டையை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தினால் உடம்பில் உள்ள கொழுப்புசத்து குறையும் மூட்டுவலிக்கும் சிறந்தது.
  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாதநாராயணன் பொடி பக்கவாதம், கை, கால் மூட்டு வலியை நீங்கும்.
  • பிரண்டை இலை, முடக்கற்றான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும் சவ்வு வளர்ச்சி அடையும்.

  • பிரண்டை இலை துவையல் 

பிரண்டை இலை - ஒரு பிடி
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் - 2 அ 3
தனியா - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 அ 4 பல்
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வதக்க
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

பிரண்டையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தனியா, பிரண்டை துண்டுகள், புளி சேர்த்து நன்கு வதக்கவும். பிரண்டை நன்கு வதங்க வேண்டும். இல்லையெனில், சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். வதங்கியதும் ஆற வைத்து, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும். பிரண்டை துவையல் தயார். இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.

  • குப்பைக் கீரை, முடக்கற்றான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
  • மூக்கிரட்டை வேரை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.
  • வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த கலவையை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
  • நொச்சி இலைச் சாறு, மிளகு தூள் ,நெய் மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
  • கேரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.
  • குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறுடன் சேர்த்து குடித்தால் மூட்டு வலி குறையு‌ம்.
  • சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
  • சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கைகால் வலி குணமாகும்.
  • காலையில் சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
  • தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
  • சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை [சுக்கு] கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. 
  • ஆல மர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு மற்றும் மூட்டு எலும்பு வலியை தடுக்கலாம்.
  • வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு இணைப்புகளில் இருக்கும் சவ்வு வளர்ச்சி அடையும், இதன் காரணமாக ஏற்படும் எலும்பு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  • வெந்தயக் கீரை, மாதுளை மற்றும்  வில்வப் பழ மேல் தோல் மூன்றையும் சம அளவில் எடுத்து காய வைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டால் எலும்பு இணைப்புகளில் இருக்கும் சவ்வு அழிவை தடுக்கலாம்.
  • அமுக்கரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.
  • அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.
  • அத்தி மரப் பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.
  • வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் செரிமானமாவதோடு கால் வாதத்தையும் குறைக்கும். 
  • 5 கிராம் இஞ்சிடன் சிறிது சீரகம், கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் [சுக்கு பொடி] மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்து வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவை வெகுவாகக் குறையும். 

குறிப்பு

  1. மேற்கூறிய முறைகளில் நமக்கு எளிதில் கிடைக்க கூடிய மருந்து பொருட்களை கொண்டு உள் மருந்து மற்றும் வெளி மருந்து செய்து உபயோகித்து பலனை பெறவும். 
  2. எதாவது ஒரு முறையை பயன்படுத்தவும். 

வலியை குறைக்க செய்யவேண்டியது ..........


  • படுக்கும் போது கால் மூட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கத்தினால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். 
  • வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும். 

மூட்டு வலியை தடுக்கும் வழிகள் ......

  • தற்போது உணவுப் பொருட்களில் இரசாயன கலப்பு இருப்பதால் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினால் மூட்டு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • மூட்டிற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் செயல்களை தவிர்க்கவும் உதாரணம் – பளூ தூக்குதல், ஓரே இடத்தில் அதிக நேரம் நிற்பது. 
  • பெற்றோர் சர்க்கரை, இதயம், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பிள்ளைகள் 30 வயதுக்கு மேல்தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 30-லிருந்து 40 நிமிடம் வரை நடைபயிற்சி அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும். 
  • அதிக உடல் எடையினால் மூட்டுகளில் நிரந்தர அழுத்தம் ஏற்பட்டு மூட்டு உள்ளுறுப்புகளும் தசைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆகவே நமது உடலுக்கேற்ற எடையை பராமரித்தால் மூட்டு வலிகளைத் தடுக்க முடியும்.
  • மூட்டு வலியை ஏற்படுத்துவதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் பயிறு வகைகள் அதுவும் கொள்ளு அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 
  • பச்சை காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் எலும்புகள் பலமடையும்.
  • உணவுப் பழக்கத்தில் அக்கறை  கொள்ளுவது அவசியமாகிறது. கிழங்கு வகை, புளிப்புச் சுவை உணவுகள், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். 

எனக்கு தெரிந்த மற்றும் அறிந்த மூட்டு வலி பற்றிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறேன், இதை படித்த நண்பர்கள் மேற்கூறிய தகவல்கள் மற்றும் குறிப்புகளை பின்பற்றி  மூட்டு சவ்வுகளை பாதுகாத்து மூட்டு வலியை வென்று சுகமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ என்னால் முடிந்த முயற்சி.


வாழ்த்துக்கள் 


வாழ்க வளமுடன் 

திங்கள், 30 நவம்பர், 2015

Diabetes Natural Remedies - இயற்கை முறையில் நீரழிவு நோயை குணப்படுத்த


நீரழிவு என்றால் என்ன?


உலகில் உள்ள மக்களில் பெரியவர் முதல் சிறியவர் வரை அதிகமானவர்களை பாதிக்கும் ஒரு வியாதி என்றால் அது Sugar என்று சொல்லகூடிய நீரழிவு நோய். இந்நோயை சர்க்கரை நோய் மற்றும் மதுமேகம் என்றும் கூறுவார்கள். 

நீரழிவு நோய் நம் உடலில் உருவாக காரணம் என்னவெனில்,  நமது உடல், இரத்தத்திலுள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றன,  இரத்த குளுக்கோஸை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றக்கூடிய வேலையை இன்சுலின் என்னும் சுரப்பி செய்கிறது.  இந்த இன்சுலின் சரியாக சுரக்காமல் போகும் பொழுது  நமது உடலால் இரத்த  குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற முடியாமல் போகிறது இந்த நிலையை  நீரழிவு என்று கூறலாம்.  


நீரழிவின்  வகைகள்.... 


  • டைப் 1 நீரழிவு நோய் [Type 1 Sugar] இது நமது உடலில் இன்சுலின் சுரப்பி மொத்தமாக சுரக்காத நிலை, டைப் 2 நீரழிவு நோய் [Type 2 Sugar] இது இன்சுலின் கம்மியாக சுரக்கும் நிலை.
  • உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்பட்ட இரத்த குளுக்கோஸ் தவிர உடலில் தங்கும் குளுக்கோஸ் கழிவாக வெளி ஏறாமல் உடலில் தங்கினால் ஹை சுகர் [High Sugar] என்றும் தேவைக்கு குறைவாக இரத்த குளுக்கோஸ் கிடைத்தால் அது லோ சுகர் [Low Sugar] என்றும் அழைக்கப்படுகிறது. 


இது நீரழிவு நோயை பற்றி நாம் எளிமையாக தெரிந்து கொள்ள கூடிய விஷயம்.


இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகமாக அல்லது குறைவாக இருப்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? 


  • திடீரென்று மயக்கம் ஏற்பட்டால் அதுவும் உணவு உண்ணும் நேரம் சிறிது தாமதம் ஆகும்போது ஏற்படும் தலைசுற்றுடன் கூடிய மயக்கம்.  
  • ஒரு நாளில் அதிகமாக சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரங்களில். 
  • வழக்கத்தைவிட அதிகமாக தாகம் எடுத்தல்.
  • களைப்பாக உணர்தல். 
  • உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைதல். 
  • வெட்டுக் காயங்கள் மற்றும் புண்கள் ஆறுவதற்கு அதிக நாட்களாகும் போது.


நோயை உணர்ந்த பின் என்ன செய்ய வேண்டும்.



நீரிழிவைக் குணப்படுத்த முடியாது, ஆனால் அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க என்ன செய்ய வேண்டும் அன்று பார்போம்.



  • உங்கள் உணவில் நீங்கள் மாற்றங்களைச் செய்வதுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். 

  • உடற்பயிற்சி செய்யுங்கள், அதாவது நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஜாக்கிங் இவற்றில் உங்களுக்கு முடிந்த பயிற்சியை செய்யவும், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம்.
  • நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவை ஒரே சமயத்தில் சாப்பிடாமல் 2 மணி நேரம் இடைவெளி விட்டு பிரித்து உண்ணவேண்டும். 
  • நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கறிகள், பழம், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு,  பருப்பு மற்றும் பயிறு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள். 
  • வாழைத்தண்டு அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சிறு குறிஞ்சாங் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும் இதனை வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். 
  • கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு மோர் அருந்த  நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நடுக்கம் தீரும்.  
  • அசைவ பிரியர்கள் மீனை தாராளமாக உண்ணலாம் [எண்ணெயில் பொறித்த மீனை தவிர்க்கவும்] கொழுப்பு நீக்கிய இறைச்சியைக் குறைவாக சாப்பிடவும் (தவிர்ப்பது நல்லது). 
  • தாவர மற்றும் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு உபயோகியுங்கள், ஆனால் அதையும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.
  • பிஸ்கெட்டு, சாக்லேட், எண்ணெயில் பொறித்த மொறுமொறுப்பான பண்டங்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள சிற்றுண்டிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
  • பால் உபயோகிக்கும் போது கொழுப்பு நீக்கிய அல்லது பாதியளவு கொழுப்பு நீக்கிய பாலைப் பயன்படுத்துங்கள்.
  • செயற்கைப் பானங்கள், மில்க் ஷேக்குகள் மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்களுக்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
  • கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவை சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையும் தவிர்க்கவும். 
  • வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதிர்கள் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஓரே இடத்தில் அமர வேண்டாம். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும் [முடியாத பட்சத்தில் இறங்கும்போது  தவிர்க்கவும்]. 
  • சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும் இவர்களை எளிதில் பிற நோய் தாக்கும், எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
  • அதிக உடல் எடை இருந்தால், அதைக் குறைக்க வேண்டும் அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
  • உங்களுக்கு புகை, மது மற்றும் போதை பழக்கம் இருந்தால்  நிறுத்திவிடுங்கள்.


நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய இயற்கை   மருந்துகள்...

மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நாவல்பழக் கொட்டை :

நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி :

மாமரத்தின் தளிர் இலைகளை உலர்த்தி  பொடி செய்து வைத்துக் கொண்டு. அந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலையில் அருந்தி  வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி :

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ள வேண்டும் அந்த கலவையை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர் :



இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை : 


நீரழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் நல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அந்த வெந்தயம் மற்றும் நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்கலாம்.

அவரைக்காய் :

பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதாம் பருப்பு :

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகும்.

ஆவாரம்பூ :

ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம் அல்லது காலையில் 5 ஆவாரம்பூவை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் அல்லது ஆவாரம்பூவை காயவைத்து பொடி பண்ணி சுடு நீரில் கலந்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

தினம் டீ குடிப்பதற்கு பதில் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய் சேர்த்து டீ போல் அருந்தலாம் [பால் சேர்க்க கூடாது டீ வாசனை வேண்டும் என்றால் சிறிது டீ தூள் சேர்த்து கொள்ளலாம்].


கோவைக் காய் மற்றும் பழம் : 

கோவைக் காயை பொரியல் செய்து  உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும், கோவைப் பழமும் நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.

கொய்யா பழம் :

இப்போதைய உணவுப் பொருட்களில் இரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யா சாப்பிட்டால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளைப் பலப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பழம்.

பாகற்காய் பொடி: 

பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒரு சில பொடிகள் சர்க்கரை நோய் குணப்படுத்தும் சக்தி உடையது, இவற்றை சுடு நீரில் கலந்து குடிக்கலாம், அவை

சிறியாநங்கை பொடி

கருஞ்சீரகப்பொடி

வெந்தய பொடி



மருந்தே வேண்டாம்....



உணவு கட்டுப்பாடு மிக அவசியம் அதாவது கண் பார்த்த உணவை எல்லாம் உண்ண ஆசை படக் கூடாது மேலும் உடற்பயிற்சி மிக முக்கியம்.

வெண் சர்க்கரையை (சீனியை)  உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

இந்த கட்டுரை மூலம் நீரழிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி,   நீரழிவு நோய் பற்றிய  பயம் மற்றும் நீரழிவு இல்லாத வாழ்க்கையை இதை படித்தவர்கள் பெற வேண்டும் என்பது எனது நோக்கம்.

எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முக்கியமான முதலுதவி சிகிச்சை.