வெள்ளி, 18 மார்ச், 2016

செவ்வாழைப் பழத்தின் மருத்துவ பயன்கள்

செவ்வாழைப் பழம்

வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது செவ்வாழைப் பழம்.  கேரளாவில் அதிகம் விளையும் செவ்வாழைப்பழம், சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருக்கும், சாப்பிட ருசியாக இருப்பதுடன், சற்று விலை அதிகமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம். செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும், தொற்றுநோய்கள் நெருங்காது.

கண்களுக்கு ஆரோக்கியம்

சிலருக்கு பகலில் நன்றாக கண்கள் தெரியும். மாலையில் சூரியன் மறைந்தபின் கண் பார்வை மங்கலாகும், இதனை மாலைக்கண் நோய் என்று கூறுவார்கள். இந்நோய் உள்ளவர்கள், தினமும் காலை மற்றும் இரவு ஆகாரத்திற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து ஒரு செவ்வாழைப்பழம் என்று தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நோய் நீங்கும்.

செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் A சத்து பார்வையை தெளிவடையச் செய்யும். கண் பிரச்சனைகளை அகற்றிவிடும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் கண்பார்வை குறைபாட்டைச் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.

எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வைக் குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு செவ்வாழைப்பழத்தை இரு வேளை ஒரு பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். 

உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து பழங்களை சாப்பிடுவது சிறந்தது. எந்த பழமாக இருந்தாலும் சரி. 

பல் நோய்கள்

செவ்வாழைப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதால் பல்வலி, பல்லசைவு, போன்ற வியாதிகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்பான நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு மணிநேரம் கழித்து செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும், பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும். .

பல்லை வலிமையாக்கும் சக்தியும் செவ்வாழைக்கு உள்ளது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் வந்தாலே நமது உடலில் பலவித சிக்கல் வந்து விடுகிறது,  மலச்சிக்கலை செவ்வாழைப் பழம் தீர்த்துவிடும்.

செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, அதனால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம். அல்லது

வாரத்திற்கு மூன்று நாட்கள் இரவில் ஆகாரத்திற்கு பின், பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.

அதிகம் பேதி கண்டவர்கள் இப்பழத்தை பொரிகடலையுடன் சேர்த்து உண்டால் பேதி நிற்கும்.

குழந்தை இன்மையை போக்கும் 

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் இருவரும் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர்ச் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எலும்புகளின் ஆரோக்கியம்

செவ்வாழை எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்க உதவும். அதனால் தான் குழந்தைகள், வயதானவர்கள் செவ்வாழை தினமும் ஒன்று சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள். 

குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகளவு கால்சியம் தேவைப்படுகிறது. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினம் ஒரு செவ்வாழையைக் கொடுங்கள்.

உடல் எடையை பராமரிக்க 

செவ்வாழையில் கலோரிகள் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காலை உணவாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர, பசி மட்டுப்படும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

செவ்வாழைப்பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும்,

நரம்புத் தளர்ச்சி நீங்க

நரம்புத் தளர்ச்சி மனிதனை நடைப்பிணமாக்கி விடும். நரம்புகள் நன்றாக இருந்தால் தான் நாம் எந்தச் செயலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்கள் நடுக்க மேற்படும். அதற்கு செவ்வாழைப்பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும்.

நரம்பு தளர்ச்சி காரணமாக, ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைவு ஏற்படும், தாம்பத்தியம் பாதிக்கப்படும் இவர்கள் உற்சாகம் கொள்ள உதவுவது செவ்வாழைப்பழமே. தினமும் இரவு ஆகாரத்திற்கு பின் பாலுடன் செவ்வாழைப் பழத்தை 30 நாட்களுக்கு விடாமல் சாப்பிட்டு வந்தால் உடம்பில் புது இரத்தம் உருவாகி நரம்புகளுக்கு வலு ஏற்பட்டு பிரச்சனை தீரும்.

செவ்வாழையிலுள்ள உயிர்சத்துக்கள் நரம்புத் தளர்ச்சிக்கு ஊக்க மருந்தாக செயல்படுகிறது.

செவ்வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாரத்தில் 3 முதல் 5 பழங்கள் சாப்பிடுவது நல்லது.  இப்பழத்தை கிடைக்கும் போது சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்,

  • உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
  • தோல் வியாதிகளையும் குணப்படுத்தும்.
  • செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
  • செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம் மற்றும் சிறுநீர் தொடர்பான வியாதிகள் இருந்தால் குணமாக்கும்.
  • செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பெண்களுக்கு நல்லது.
  • இருதயம் பலப்படும்

சிறுவர்களாய் இருப்பின் அரைப் பழமும் பெரியவர்கள் ஒரு பழமும் அவரவர் வயதிற்கும், ஜீரணத்திற்கும் தக்கபடி சாப்பிட்டு வாருங்கள். 
பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.

வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி அறிய இந்த linkயை கிளிக் செய்யவும் 


பல்வேறு வகையான வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி அறிய இந்த linkயை கிளிக் செய்யவும் 




வாழ்க வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக